பிப்.14 ல் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

பிப்.14 ல்  விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

மாவட்ட ஆட்சியர்  ஜானி டாம் வர்கீஸ் 

நாகப்பட்டினம் மாவட்டத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வரும் 14ம் தேதி நடைபெறுகிறது என மாவட்ட ஆட்சித்தலைவர் ஜானி டாம் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.
நாகப்பட்டினம் மாவட்டத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் பிப்ரவரி-2024ஆம் மாதத்திற்கானது வருகின்ற 14.02.2024 புதன் அன்று காலை 10.30 மணிக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலக முதன்மை மாநாட்டு கூட்ட அரங்கில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் நாகப்பட்டினம் மாவட்ட விவசாயிகள் மற்றும் விவசாய சங்கப்பிரதிநிதிகள் கலந்துகொண்டு தங்களது கருத்துகளை தெரிவித்து பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் .ஜானி டாம் வர்கீஸ், கேட்டுக் கொள்கிறார்.

Tags

Next Story