விவசாயிகள் குறைதீர் கூட்டம்

விவசாயிகள் குறைதீர் கூட்டம்

திண்டுக்கலில் கலெக்டர் பூங்கொடி தலைமையில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடந்தது.

திண்டுக்கலில் கலெக்டர் பூங்கொடி தலைமையில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடந்தது.
திண்டுக்கல் : ''மாதாமாதம் விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடத்துவதே வேஸ்ட்'' என விவசாயிகள் தங்கள் ஆதங்கத்தை தெரிவித்தனர்.திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் கலெக்டர் பூங்கொடி தலைமையில் நடந்தது. விவசாயிகள் விவாதம் :ராமசாமி, குடகனாறு பாதுகாப்பு சங்கம்: திண்டுக்கல், கரூர் மாவட்ட விவசாயிகள் குடகனாற்றில் வரும் தண்ணீரை நம்பி உள்ளனர். இந்நிலையில் இங்கு தண்ணீர் வரத்து வராமல் உள்ளது. இதை தடுக்கும் வகையில் அரசு தரப்பில் வல்லுநர்கள் குழு அமைக்கப்பட்டும் அதன் அறிக்கை 3 ஆண்டாக வராமல் உள்ளது. எப்போது அதிகாரிகளிடம் கேட்டாலும் அரசு கவனத்திற்கு கொண்டு செல்லப்படும் என்கின்றனர்.விவசாய குறைதீர் கூட்டத்தில் மனு கொடுத்தபோதிலும் எந்த நடவடிக்கையும் எடுத்தபாடில்லை.இக்கூட்டம் நடத்துவதே வேஸ்டாக உள்ளது என்றனர்.

Tags

Next Story