சிவகங்கை மாவட்டத்தில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் தேதி அறிவிப்பு

சிவகங்கை மாவட்டத்தில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் தேதி அறிவிப்பு
பைல் படம்
சிவகங்கை மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் வருகின்ற பிப் 29, வியாழக்கிழமை அன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது.
சிவகங்கை மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் வருகின்ற 29.02.2024 வியாழக்கிழமை அன்று முற்பகல் 10.00 மணியளவில் சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. மாவட்டத்தின் அனைத்துத்துறை உயர் அலுவலர்கள் பங்கேற்கும் இக்கூட்டத்தில் மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளிலும் உள்ள விவசாயப் பெருமக்கள் கலந்து கொண்டு விவசாயம் சார்ந்த குறைகளைத் தெரிவித்து அதனை நிவர்த்தி செய்து கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story