நவ.17 ல் விவசாயிகள் குறை தீர்வு நாள் - ஆட்சியர் அறிவிப்பு

நவ.17 ல் விவசாயிகள் குறை தீர்வு நாள் - ஆட்சியர் அறிவிப்பு
X

விவசாயிகள் குறைதீர் கூட்டம் 

திருவண்ணாமலை மாவட்டத்தில் நவம்பர் மாதத்திற்கான விவசாயிகள் குறை தீர்வு நாள் கூட்டம் 17.11.2023 வெள்ளிக்கிழமை அன்று முற்பகல் 10.30 மணியளவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் நடக்கும் இக்கூட்டத்தில் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள வேளாண்துறை மற்றும் விவசாயம் சார்ந்த துறைகளான தோட்டக்கலைத்துறை, வேளாண் வணிகம், வேளாண் பொறியியல் துறை, கால்நடை பராமரிப்புத்துறை,கூட்டுறவுத்துறை, வருவாய்த்துறை, அலுவலர்கள் கலந்து கொண்டு வங்கியாளர்கள் மற்றும் பிற சார்புத்துறை விவசாயிகளின் கோரிக்கைகளுக்குப் பதில் அளிக்க உள்ளனர். எனவே விவசாய குறைகள் மற்றும் விவசாயிகள் மற்றும் சங்கப் பிரதிநிதிகள் தங்கள் பொதுக் கோரிக்கைகளை கூட்டத்தில் தெரிவித்தும் தனிநபர் குறைகள் குறித்து மனுக்கள் அளித்தும் பயன் அடையுமாறு திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் பா.முருகேஷ் கேட்டுக்கொண்டுள்ளார்.

Tags

Next Story