நாமக்கல்லில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்!

நாமக்கல்லில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்!

விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

நாமக்கல்லில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.
நாமக்கல் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில், ஒவ்வொரு மாதமும் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடத்தப்பட்டு, விவசாயிகளிடம் இருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்று, அவர்களின் குறைகள் நேரடியாக கேட்டறிந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பிப்ரவரி மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், நாளை மார்ச் 1ம் தேதி வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. மாவட்ட ஆட்சியர் உமா நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து விவசாயிகளின் குறைகளை கேட்டறிகிறார். இக்கூட்டத்தில் விவசாயிகள், விவசாய சங்கப் பிரதிநிதிகள் கலந்துகொண்டு, தங்களது பயிர் சாகுபடிக்குத் தேவையான நவீன தொழில்நுட்பங்கள், வேளாண் இடு பொருட்கள் இருப்பு விவரங்கள், வேளாண்மை உழவர் நலத்துறை மற்றும் இதர துறைகளில் செயல்படுத்தப்பட்டு வரும் மானியத் திட்டங்கள் குறித்து அறிந்து கொள்வதுடன் தங்களது கோரிக்கைகளையும் தெரிவித்து பயன் பெறலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story