தென்காசி : விவசாயிகளுக்கு குறைதீர்க்கும் கூட்டம்

தென்காசி : விவசாயிகளுக்கு குறைதீர்க்கும் கூட்டம்
தென்காசியில் விவசாயிகளுக்கு குறைதீர்க்கும் கூட்டம் அறிவிப்பு
தென்காசியில் வருகின்ற ஜனவரி 24ம் தேதி விவசாயிகளுக்கு குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற உள்ளது.
தென்காசி மாவட்ட விவசாயிகள் அனைவரும் பயன்பெறுகின்ற வகையில் ஒவ்வொரு மாதமும் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் வைத்து நடைபெறும். இதே போன்று இந்த ஆண்டிற்கான முதல் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ஜன., 24ம் தேதி அன்று காலை 10 மணியளவில் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் வைத்து நடைபெறும் என மாவட்ட ஆட்சித் தலைவர் துரை. ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story