25 ஆண்டுகளை நிறைவு செய்த உழவர் சந்தை திட்டம்

25 ஆண்டுகளை நிறைவு செய்த உழவர் சந்தை திட்டம்

கேக் வெட்டி கொண்டாட்டம் 

உழவர் சந்தை துவங்கி 25 ஆண்டுகளானதையொட்டி சூரமங்கலம் உழவர் சந்தையில் விவசாயிகள் கேக் வெட்டி கொண்டாடினர்.
உழவர் சந்தை தொடங்கப்பட்டு 24 ஆண்டுகள் முடிவடைந்து 25-வது ஆண்டு தொடக்க விழா நேற்று நடந்தது. இதையொட்டி உழவர் சந்தை துவங்கி 25 ஆண்டுகளானதையொட்டி சூரமங்கலம் உழவர் சந்தையில் விவசாயிகள் கேக் வெட்டி கொண்டாடினர். விவசாயிகள் கேக் வெட்டி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். தொடர்ந்து உழவர்சந்தை அமைத்து கொடுத்த முன்னாள் முதல்- அமைச்சர் கருணாநிதிக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து உழவர் சந்தைக்கு வந்த பொதுமக்களுக்கு காய்கறிகள், கறிவேப்பிலை, கொத்தமல்லி போன்றவற்றை இலவசமாக வழங்கினர். இதனை பொதுமக்கள் போட்டி போட்டு வாங்கி சென்றனர். முன்னாள் துணை மேயர் பன்னீர்செல்வம் தலைமையில் நடந்த நிகழ்ச்சியில் பகுதி செயலாளர் அன்பழகன், பகுதி கவுன்சிலர் சிவகாமி, அறிவழகன், மாதேஸ்வரன், வேளாண்மை உதவி அலுவலர்கள் முருகன், தர்மேந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story