விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

சிங்கம்புணரியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சிங்கம்புணரியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகே வடக்கு மாம்பட்டி குரூப்பில் முறைகேடாக வழங்கிய 300 ஏக்கர் நிலங்களுக்கான பட்டாக்களை ரத்து செய்யவும், காட்டு இடையன் கண்மாய், கலுங்கு, வணங்காமுடிபட்டி கிராம கோயில் பாசன கால்வாய்கள், வடிகால்கள், பாதை, மேய்ச்சல் நிலம் ஆகியவற்றை மீட்டு விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காக்கவும், வாகை கண்மாய் ஆக்கிரமிப்பை அகற்றவும் வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் மோகன் தலைமை வகித்தார். மாநிலத் துணைத் தலைவர் முத்துராமு, மாவட்ட பொருளாளர் விஸ்வநாதன், மாவட்ட துணைச் செயலாளர் ஆறுமுகம், சி.ஐ.டி.யு., மாவட்ட செயலாளர் சேதுராமன், மாதர் சங்க மாவட்ட செயலாளர் சாந்தி முன்னிலை வகித்தனர். வேல்முருகன், ராஜேந்திரன் ஆகியோர் பங்கேற்றனர்.

Tags

Next Story