கால்வாய் திட்டப் பணிக்கு விவசாய நிலங்களை வழங்க விவசாயிகள் எதிர்ப்பு

கால்வாய் திட்டப் பணிக்கு விவசாய நிலங்களை வழங்க மாட்டோம் விவசாயிகள் எதிர்ப்பு

கால்வாய் திட்டப் பணிக்கு விவசாய நிலங்களை வழங்க மாட்டோம் விவசாயிகள் எதிர்ப்பு கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி வட்டம் ஆழியாளம் அணைக்கட்டு வலது புற கால்வாய் திட்ட பணிக்கு விவசாய விலை நிலங்களை கையகப்படுத்துவது தொடர்பாக விவசாயிகளிடம் கருத்து கேட்புக் கூட்டம் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் விளை நிலங்களை கால்வாய் திட்ட பணிக்கு தருவதில்லை என்று விவசாயிகள் தரப்பில் மறுப்பு கடிதங்கள் அளிக்கப்பட்டது. மேலும் பகுதி கிராம விவசாயிகள் பிள்ளையார் அக்ரஹாரம் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம் முன்பு விவசாயிகள் தமிழக அரசை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பி தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.

Tags

Read MoreRead Less
Next Story