ஸ்மார்ட் மீட்டர் பொருத்துவதை கண்டித்து விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

ஸ்மார்ட் மீட்டர் பொருத்துவதை கண்டித்து விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

ஸ்மார்ட் மீட்டர் பொருத்துவதை கண்டித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் செய்தனா்

ஸ்மார்ட் மீட்டர் பொருத்துவதை கண்டித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் செய்தனா்
தமிழகத்தில் மின்வாரிய ஸ்மார்ட் மீட்டர் பொருத்தும் திட்டத்தை தமிழக முதல்-அமைச்சர் நிராகரிக்கவேண்டி மனு அனுப்பும் போராட்டம் சங்ககிரி மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் சார்பில் நடைபெற்றது. இந்த போராட்டத்திற்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்க தாலுகா தலைவர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். மாவட்ட விவசாய சங்க செயலாளர் ராமமூர்த்தி முன்னிலை வகித்தார். மின்வாரிய ஸ்மார்ட் மீட்டர் பொருத்த வேண்டி மாநில அரசுகளை நிர்பந்தம் செய்யும் மத்திய அரசை கண்டித்து விவசாயிகள் முழக்கமிட்டனர். இந்த போராட்டத்தில் பால் உற்பத்தியாளர் சங்க மாவட்ட தலைவர் மணி, தாலுகா பொருளாளர் ஜெகதீஷ், மாணிக்கம் உள்பட பலர் கலந்து கொண்டனர். பின்னர் கோரிக்கையை வலியுறுத்தி சங்ககிரி மின்வாரிய செயற்பொறியாளர் உமாராணியிடம், விவசாயிகள் சங்கத்தினர் மனு அளித்தனர்.

Tags

Next Story