உப்பாறு அணைக்கு தண்ணீர் திறந்து விடக்கோரி கருப்புக்கொடி கட்டி விவசாயிகள் போராட்டம்

உப்பாறு அணைக்கு தண்ணீர் திறந்து விடக்கோரி கருப்புக்கொடி கட்டி விவசாயிகள் போராட்டம்

விவசாயிகள் போராட்டம்

குண்டடத்தை அடுத்துள்ள உப்பாறு அணைக்கு தண்ணீர் வழங்க கோரி பனமரத்து பாளையம் உப்பாறு அணைப்பகுதி உட்பட பத்துக்கு மேற்பட்ட கிராமங்களில் பாசன விவசாயிகள் கருப்புக்கொடி கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பூர் மாவட்டம் குண்டடத்தை அடுத்துள்ள உப்பாறு அணைக்கு தண்ணீர் வழங்க வலியுறுத்தி பாசன விவசாயிகள் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வந்தனர். இது தொடர்பாக பேச்சு வார்த்தைக்கு அழைத்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை உப்பாறு அணைக்கு தண்ணீர் திறந்து விடக்கோரிய பனமரத்து பாளையம் உப்பாறு அணைப்பகுதி உள் ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமப் பகுதிகளில் உள்ள வீடுகள், பேக்கரி, கடைகள், பூச்சி மருந்து கடைகள் உள்ளிட்ட பகுதிகளில் கருப்பு கொடி கட்டி விவசாயிகள் போராட்டம் நடத்தினர்.இதனால் குண்டடம், தாராபுரம் பகுதியில் பெரும் பரபரப்பாக காணப்படுகிறது.

Tags

Next Story