அப்பியம்பட்டி கிராமத்தில் விவசாயிகள் 4-ம் நாளாக போராட்டம்

அப்பியம்பட்டி கிராமத்தில் விவசாயிகள் 4-ம் நாளாக போராட்டம்

தனியார் காற்றாலை நிறுவனம் அமைக்கும் மின்பாதையினை மாற்றி அமைக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென 4வது நாளாக விவசாயிகள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.


தனியார் காற்றாலை நிறுவனம் அமைக்கும் மின்பாதையினை மாற்றி அமைக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென 4வது நாளாக விவசாயிகள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே அப்பியம்பட்டி கிராமத்தில் தனியார் நிறுவனம் காற்றாலைகள் மூலம் பெறப்படும் மின்சாரத்தை மின்பாதை மூலம் தனியார் துணை மின் நிலையத்திற்கு எடுத்துச் செல்ல பாதை அமைத்தனர்.

விவசாயிகளின் அனுமதியின்றி விவசாய நிலங்களை பாதிக்கும் வகையிலும், அரசு புறம்போக்கு நிலத்திலும், நீர், நிலை ஓடை பகுதிகளிலும் மின் கம்பங்கள் அமைத்து மாவட்ட நிர்வாகத்திடம் முறையான அனுமதி பெறாமல் சட்டத்திற்கு புறம்பாக மின்பாதையினை அமைத்து வருவதாக விவசாயிகள் குற்றம் சாட்டினர்.

தனியார் காற்றாலை நிறுவனம் அமைக்கும் மின்பாதையினை மாற்றி அமைத்து விவசாயத்தை பாதுகாக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென 4-வது நாளாக விவசாயிகள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Tags

Next Story