முதுகுளத்தூர் தாலுகா அலுவலகம் முன்பு விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

முதுகுளத்தூர் தாலுகா அலுவலகம் முன்பு விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் 

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் தாலுகா அலுவலகம் முன்பு 7கிராம விவசாயிகள் வெள்ள நிவாரணம் கேட்டு திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் தாலுகா ஆபீஸ் முன்பு 7கிராம விவசாயிகள் வெள்ள நிவாரணம் கேட்டு ஆர்ப்பாட்டம் . முதுகுளத்தூர் தாலுகாவைச் சேர்ந்த 7 கிராம விவசாயிகள் வெள்ள நிவாரணம் கேட்டு திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். செல்வநாயகபுரம், காக்கூர், பருத்திகுளம், தட்டானேந்தல் நல்லுார் மொச்சி களம்உள்பட 7 கிராம விவசாயிகள் முதுகுளத்தூர் பஸ் நிலையத்திலிருந்து ஊர்வலமாக சென்று தாலுகா ஆபீஸ் முன்பு திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுட்டனர்.

முதுகுளத்தூர் தாசில்தார் சடையான்டி விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி அமைதிப்படுத்தினார். கலெக்டருக்கு மழை சேதங்கள் குறித்து எழுதி அனுப்பிவிட்டோம். விரைவில் அரசு நிவாரணம் அறிவிக்கும் என விவசாயிகளிடம சமரசம் பேசியதால் கலைந்து சென்றனர்.

Tags

Next Story