சிப்காட் திட்டத்தை எதிர்த்து நாமக்கல்லில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

சிப்காட் திட்டத்தை எதிர்த்து நாமக்கல்லில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

சிப்காட் திட்டத்தை எதிர்த்து நாமக்கல்லில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

சிப்காட் திட்டத்தை எதிர்த்து நாமக்கல்லில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

மோகனூர் பகுதியில் சிப்காட் தொழிற்பேட்டை திட்டத்தை கைவிடக்கோரி, நாமக்கலில் சிப்காட் எதிர்ப்பு இயக்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நாமக்கல் மாவட்டம், மோகனூர் தாலுக்கா, வளையப்பட்டி, புதுப்பட்டி, அரூர் உள்ளிட்ட சுற்று வட்டாரப் பகுதிகளில், 700 ஏக்கர் பரப்பில் சிப்காட் தொழிற்பேட்டை அமைக்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. அப்பகுதியில் தொழிற்பேட்டை அமைந்தால், விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டு, தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என கூறி, அப்பகுதியில் உள்ள விவசாயிகள் சிப்காட் தொழிற்பேட்டை அமைப்பதை அரசு கைவிட வலியுறுத்தி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். விவசாயிகள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சியினர் ஒருங்கிணைந்து சிப்காட் எதிர்ப்பு இயக்கம் என்ற அமைப்பை துவக்கி, இதுவரை 50 கட்ட போராட்டங்களை நடத்தியுள்ளனர். ஆனால் இதுவரை அரசிடம் இருந்து எந்த அறிவிப்பு வெளியாகவில்லை. இந்தநிலையில், சிப்காட் எதிர்ப்பு இயக்கம் அறிவிப்பின் பேரில், 51 வது கட்ட போராட்டம் நாமக்கல் பார்க் ரோட்டில் இன்று நடைபெற்றது. விவசாய முன்னேற்ற கழக பொதுச் செயலாளர் பாலசுப்ரமணியன் தலைமை வகித்தார்.

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி நாமக்கல் ஒருங்கிணைந்த மாவட்ட விவசாய அணி செயலாளர் ரவிச்சந்திரன் முன்னிலை வகித்தார். கம்யூனிஸ்ட் பொறுப்பாளர் ரவீந்திரன், பாமக மாநில துணை செயலாளர் பொன் ரமேஷ், சிப்காட் எதிர்ப்பு இயக்க நிர்வாகிகள் ராம்குமார், பழனிவேல், சரவணன், தண்டபாணி, ரவி உள்ளிட்ட திரளான விவசாயிகள் ஆண்களும் பெண்களும் போராட்டத்தில் கலந்து கொண்டு சிப்காட் திட்டத்தை கைவிடக்கோரி கோஷங்களை எழுப்பினர்.

Tags

Next Story