சிப்காட் திட்டத்தை எதிர்த்து நாமக்கல்லில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்!

சிப்காட் திட்டத்தை எதிர்த்து நாமக்கல்லில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

சிப்காட் திட்டத்தை எதிர்த்து நாமக்கல்லில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்! சிப்காட் எதிர்ப்பு இயக்கம் அறிவிப்பின் பேரில், 51வது கட்ட போராட்டம் நாமக்கல் பஸ் நிலையம் அருகே உள்ள பூங்கா சாலையில் நடைபெற்றது. விவசாய முன்னேற்ற கழக பொதுச் செயலாளர் பாலசுப்ரமணியன் தலைமை வகித்தார். கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி நாமக்கல் ஒருங்கிணைந்த மாவட்ட விவசாய அணி செயலாளர் ரவிச்சந்திரன் முன்னிலை வகித்தார்.

கம்யூனிஸ்ட் பொறுப்பாளர் ரவீந்திரன், பாமக மாநில துணை செயலாளர் பொன் ரமேஷ், சிப்காட் எதிர்ப்பு இயக்க நிர்வாகிகள் ராம்குமார், பழனிவேல், சரவணன், தண்டபாணி, ரவி உள்ளிட்ட திரளான விவசாயிகள் ஆண்களும் பெண்களும் போராட்டத்தில் கலந்து கொண்டு சிப்காட் திட்டத்தை கைவிடக்கோரி கோஷங்களை எழுப்பினர்.

Tags

Next Story