விவசாயிகள் உப்பளம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து முற்றுகை

விவசாயிகள் உப்பளம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து முற்றுகை

உப்பளம் அமைக்க எதிர்ப்பு 

ராமநாதபுரம் மாவட்டம், திருப்புல்லாணி அருகே ஆனைகுடி கண்மாயில் உப்பளம் தயாரிக்கும் நிறுவனம் பணியை தொடர்வதை கண்டித்து அப்பகுதி விவசாயிகள் முற்றுவிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

ராமநாதபுரம் மாவட்டம், திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட களரி, பள்ளமோர்குளம் ஆகிய ஊராட்சிகளுக்கு உட்பட்ட 10க்கும் மேற்பட்ட கிராமங்கள் ஆனைகுடி கண்மாய் தண்ணீரை நம்பியே உள்ளது. இக்கிராம மக்கள் தங்களுடைய வாழ்வாதாரமாக விவசாயத்தை நம்பி உள்ளனர். வானம் பார்த்த பூமியான இப்பகுதியில் 15 ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் வசித்து வருகிறார்கள். சுமார் ஆயிரத்துக்கு மேற்பட்ட ஏக்கரில் நெல், மிளகாய், பருத்தி, கேப்பை, குதிரைவாலி உள்ளிட்ட விவசாயங்களை ஆணைக்குடி கண்மாய் நீரை நம்பி செய்து வருகிறார்கள். இந்த நிலையில் ஆணைகுடி கண்மாயின் நீர்வரத்து பகுதியில் தனியார் நிறுவனம் உப்பளம் ஒன்றை துவங்கி இருக்கின்றது.

கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு துவங்கிய நிறுவனம் பல்வேறு பிரச்சனைகளால் மூடியது. அதனை விலைக்கு வாங்கிய தூத்துக்குடியை சேர்ந்த தனியார் நிறுவனம் ஆயிரம் ஏக்கர் விவசாய நிலத்தை அழித்து உப்பளம் பணியை துவங்கி உள்ளார்கள். இதற்கு பகுதி மக்கள் கடும் எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக ஆனைகுடி, பள்ளமோர்குளம், பால்கரை, அச்சடிபிரம்பு, கொடிக்குளம், வெண்குளம், வித்தானூர் உள்ளிட்ட கிராம மக்கள் தங்களுடைய குடிநீர் வாழ்வாதாரமாக கருதுவது ஆணைகுடி கண்மாயைதான். இந்த கண்மாயை நம்பி தான் விவசாயமும், குடிநீர், கால்நடைகளுக்கான குடிநீர் ஆதாரமும் இருந்து வருகின்றது.

இந்த சூழ்நிலையில் தனியார் நிறுவனம் அங்கு உப்பள பணியை மேற்கொள்வதால் தங்களுடைய குடிநீர் வாழ்வாதார மட்டுமின்றி விவசாய வாழ்வாதாரமும் கடுமையாக பாதிக்கப்படுவதாக குற்றம் சுமத்தும் இவர்கள் உப்புள பணியை தடுத்து நிறுத்திட வேண்டி மாவட்ட ஆட்சித் தலைவர், வருவாய் கோட்டாட்சியர் உள்ளிட்டவற்களிடம் பலமுறை புகார் மனுக்கள் கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தனர். நீதிமன்றம் உப்பள பணிகள் மேற்கொள்ள கூடாது என்றும், மாசுகட்டுப்பாட்டு வாரியம், மாவட்ட நிர்வாகத்திடம் அனுமதி பெற வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் எந்த அனுமதியும் பெறாமல் உப்பள நிறுவனம் நேற்றும் இன்றும் பணிகளை தொடங்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து உப்பள நிறுவனத்தை அப்பகுதி மக்கள், விவசாயிகள் முற்றுகையிட்டதால் பரபரப்பு நிலவியது. இதனையடுத்து அங்கு வந்து திரு உத்திரகோசமங்கை போலீசார் விவசாயிகளிடம் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.

Tags

Read MoreRead Less
Next Story