செய்யாறில் வேளாண் சிறப்பு பொருளாதார மண்டலம் உருவாக்க விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

செய்யாறில் வேளாண் சிறப்பு பொருளாதார மண்டலம் உருவாக்க விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
ஆர்பாட்டம்
திருவண்ணாமலை மாவட்டம், வேளாண் சிறப்பு பொருளாதார மண்டலம் உருவாக்க தமிழக கட்சி சார்பற்ற விவசாயிகள் சார்ப்பில் ஆர்பாட்டம் நடைபெற்றது.
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு உழவர் சந்தை அருகில் கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கம் சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் தமிழகத்தில் நடைபெறும் உலக முதலீட்டாளர் மாநாட்டில் வேளாண் மதிப்பு கூட்டு தொழிற்சாலை அமைக்க திட்டங்கள் உள்ளதா என்பது குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் எனவும் விவசாயிகளின் வருமானத்தை உயர்த்த முதலீட்டாளர்கள் மாநாட்டில் தக்காளி வெங்காயம், பால் மரவள்ளி,கரும்பு,பழ வகைகள் மலர் சாகுபடிகளுக்கு மதிப்பு கூட்டு தொழிற்சாலை அமைக்க முதலீட்டாளர்கள் முன் வரவேண்டும் எனவும் செய்யாறு உழவர் சந்தை அருகே கட்சி சார்பற்ற விவசாயிகள் 20-க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Tags

Next Story