செஞ்சியில் விவசாயிகள் பேரணி

செஞ்சியில் விவசாயிகள் பேரணி

பேரணியில் கலந்து கொண்டவர்கள்

செஞ்சியில் விவசாயிகள் பேரணி நடைபெற்றது.

தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் தமிழ்நாடு அரசு ரேஷன் கடைகளில் விற்கப்படும் பாமாயிலுக்கு பதில் தமிழ்நாட் டின் நிலக்கடலை, தேங்காய், எள்ளு உள்ளிட்ட எண்ணெய் வகை களை மானிய விலையில் விற்பனை செய்யக்கோரி கவனஈர்ப்பு பேரணி செஞ்சியில் நடைபெற்றது.

இதற்கு தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க நிறுவனர் வக்கீல் ஈசன் முருகசாமி தலைமை தாங்கினார். மாநில செயலாளர் சக்திவேல், இளைஞரணி துணை செயலாளர் ரமேஷ் ஆகியோர் கொடியசைத்து பேரணியை தொடங்கி வைத்தனர். விழுப்புரம் வடக்கு மாவட்ட செயலாளர் சுரேஷ் வரவேற்றார்.

இதில் கலந்துகொண்ட விவசாயிகள் கோரிக்கை வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்திய படி சென்றனர். செஞ்சி தீயணைப்பு நிலையம் எதிரில் இருந்து புறப்பட்ட இப்பேரணி விழுப்புரம் சாலை, கடை வீதி வழியாக சென்று செஞ்சி பேரூராட்சி அலுவலகத்தில் முடிவடைந்தது. இதில் மாநில தலைவர் சண்முகசுந்தரம், பொதுச்செயலாளர் முத்து விஸ்வநாதன்,

துணை பொதுச்செயலாளர் நேதாஜி, விழுப்புரம் மாவட்ட செயலாளர் சந்திரபிரபு, கிழக்கு மாவட்ட அமைப்பு தலைவர் உல கநாதன், தெற்கு மாவட்ட தலைவர் ரகோத்துமன் உள்பட ஏராள மான விவசாயிகள் கலந்து கொண்டனர். முடிவில் விழுப்புரம் வடக்கு மாவட்ட அவைத்தலைவர் ஏழுமலை நன்றி கூறினார்.

Tags

Next Story