அபாய நிலையில் மின்மாற்றி - மாற்றி அமைக்க விவசாயிகள் கோரிக்கை

பெரம்பலூர் அருகே சுமார் 60 ஆண்டுகள் பழமையான மின்மாற்றி சேதமடைந்து கீழே விழும் அபாய நிலையில் உள்ளது. இதனால் விவசாயம் செய்ய முடியாமல் விவசாயிகள் தவித்து வருகின்றனர்.

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் துங்கபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட, பகுதியில் அமைந்துள்ள எஸ்.எஸ் .8 என்ற மின்மாற்றி யான டிரான்ஸ்பார்ம் சுமார் 60 ஆண்டுகளுக்கு முன்பு அப்பகுதியில் அமைக்கப்பட்டதாக கூறப்படுகிறது இந்த நிலையில் அந்த மின்மாற்றிலிருந்து சுமார் 15 மின் மோட்டாரர்களுக்கு மேல் இயங்கி வருவதாகவும் அதில் சுமார் 150 ஏக்கருக்கு மேல் விவசாயம் செய்து வருகின்றனர் .

அப்பகுதி விவசாய நிலங்களில் நெல். கரும்பு, எள்ளு,வேர்க்கடலை சோளம் போன்ற பயிர்கள் பயிர் செய்து வருவதாகவும் தெரிவித்துள்ளனர், மேலும் இந்த எஸ்.எஸ் .8 என்ற மின்மாற்றிகம்பங்கள் பழுது அடைந்து கம்பிகள் தெரியும் அளவிற்கு சேதம் அடைந்து இருப்பதால் எப்போது மின்மாற்றி கீழே விழும் அபாய நிலையில் உள்ளது . இதனால் உயிர் சேதமும் நேரிடும்அபாயம் இருப்பதாகவும் மாற்றியிலிருந்து வரும் மின் கம்பிகள் பல இடங்களில் மிகவும் தாழ்வான நிலையில் தொங்கி கொண்டு உள்ளது.

நடந்து செல்பவர்கள் கை தூக்கினால் கை மோதும் நிலையும் உள்ளதாகவும் தெரிவித்த விவசாயிகள் இதனால் பல இடங்களில் மின் கம்பங்கள் சாய்ந்த நிலையில் உள்ளது, எனவே அங்கு விவசாயம் செய்ய முடியாமல் விவசாயிகள் தத்தளித்து வருவதாகவும் இதுகுறித்து அதிகாரிகளிடம் தகவல் தெரிவித்தும் மனு கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் இல்லை எனவும், இது சம்பந்தமாக மாவட்ட நிர்வாகமும், மின்வாரியமும் உடனடியாக போர்க்கால அடிப்படையில் குறிப்பிட்ட மின்மாற்றியை மாற்றியும், சாய்ந்த நிலையில் உள்ள மின்கம்பங்களை சரி செய்து விவசாயிகள் குறையை தீர்க்க வேண்டும் விவசாயிகள் அளவில் கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags

Next Story