கால்வாய்களை தூர்வாரக் கேட்டு விவசாயிகள் கண்டன ஆர்ப்பாட்டம்

கால்வாய்களை தூர்வாரக் கேட்டு விவசாயிகள் கண்டன ஆர்ப்பாட்டம்

கண்டன ஆர்ப்பாட்டம்

நாகர்கோவிலில் கால்வாய்களை தூர்வாரக் கேட்டு விவசாயிகள் கண்டன ஆர்ப்பாட்டம்
கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை கால்வாய் பகுதியில் ஏற்பட்ட உடைப்பை உடனே சரி செய்ய வேண்டும், மயிலாடி கூண்டுபாலம் பணிகள் முடித்து எம் எம் கால்வாயில் தண்ணீர் திறந்து விட வேண்டும், மாவட்டத்திலுள்ள அனைத்து கால்களையும் தூர்வாரி கடை வரம்பு வரை தண்ணீர் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், கன்னியா குமரி மாவட்ட கிளை சார்பில் நேற்று நாகர்கோவில் கலெக்டர் அலுவலகம் எதிரே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட துணைச் செயலாளர் விஜி தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் ரவி, தலைவர் சேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் கோதை ஆறு நீர்ப்பாசனத் துறை தலைவர் வின்ஸ் ஆன்றோ, விவசாயிகள் செண்பக சேகரப்பிள்ளை, புலவர் செல்லப்பா, ரவி உட்பட பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினர்.

Tags

Next Story