மக்காச்சோள பயிர்களை மான்கள் சேதப்படுத்தியதால் விவசாயிகள் வேதனை

மக்காச்சோள பயிர்களை மான்கள் சேதப்படுத்தியதால் விவசாயிகள் வேதனை

விவசாயிகள் வேதனை

கயத்தாறு அருகே நூற்றுக்கணக்கான ஏக்கரில் மக்காச்சோள பயிர்களை மான்கள் சேதப்படுத்தியதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்
தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறு அருகே உள்ள ஆசூர் பஞ்சாயத்தில் தளவாய்புரம் கிராமத்தில் சுமார் 150 ஏக்கர் மக்காச்சோள பயிர்கள் பயிரிடப்பட்டு வருகின்றன. இந்த மக்காச்சோள பயிர்கள் தற்போது அறுவடைக்கு தயாராகும் நிலையில் நூற்றுக்கணக்கான மான்கள் கூட்டம் கூட்டமாக நள்ளிரவில் தோட்டத்திற்குள் வந்து இரவு நேரங்களில் அதனை தின்றும் சமட்டியும் நாசப்படுத்தி உள்ளது. மேலும் இந்த பகுதியில் நாற்கர சாலையோரத்தில் தேவராஜன் 5 ஏக்கர் நிலத்தில் மக்காசோளம் பயிரிடுகிறார். அதேபோல் கந்தசாமி என்பவருக்கு 5ஏக்கர், சுப்புராஜ் 6ஏக்கர், கிருஷ்ணசாமி 4ஏக்கர் உள்பட நூற்றிக்கும் மேற்ப்பட்ட ஏக்கரில் பயிடப்பட்ட மக்காசோளப் பயிர்கள் மான்களால் சேதமாகியுள்ளது. இதனைக் கண்டும் விவசாயிகள் வேதனையில் கதறி அழுதனர். மாவட்ட நிர்வாகம், தமிழக முதல்வர், வனத்துறையினர் சம்பந்தப்பட்ட விளைநிலங்களை பார்வையிட்டு நிவாரண வழங்க வேண்டும் எனவும், இந்த பகுதியில் விவசாயிகளுக்கு மானிய விலையில் விதைகளும் மருந்துகளும் வழங்க வேண்டும் உட்பட பல்வேறு கோரிக்கைகளை வைத்துள்ளனர். உடனடியாக மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் தாலுகா அலுவலகம் முன்பு நாங்கள் பல்வேறு போராட்டங்களை நடத்துவதாகவும் விவசாயிகள் கூறி உள்ளனர்.

Tags

Next Story