வண்டல் மண் எடுக்க விருப்பமுள்ள விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்

வண்டல் மண் எடுக்க விருப்பமுள்ள விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்

 பெரம்பலூரில் வண்டல் மண் எடுக்க விருப்பமுள்ள விவசாயிகள் இணையதளம் வாயிலாக விண்ணப்பித்து எடுத்துக்கொள்ளலாம் –ன கலெக்டர் அறிவுறுத்தியுள்ளார்.  

பெரம்பலூரில் வண்டல் மண் எடுக்க விருப்பமுள்ள விவசாயிகள் இணையதளம் வாயிலாக விண்ணப்பித்து எடுத்துக்கொள்ளலாம் –ன கலெக்டர் அறிவுறுத்தியுள்ளார்.

பெரம்பலூர் மாவட்டம் வண்டல் மண் எடுக்க விருப்பமுள்ள விவசாயிகள் இணையதளம் வாயிலாக விண்ணப்பித்து எடுத்துக்கொள்ளலாம் – மாவட்ட ஆட்சித்தலைவர் க.கற்பகம் தகவல். தமிழக அரசால் பொதுப்பணித்துறை மற்றும் ஊரக வளர்ச்சிதுறை கட்டுப்பாட்டிலுள்ள ஏரி, குளங்களிலிருந்து விவசாயிகள், மண்பாண்டம் செய்வோர் மற்றும் பொதுமக்கள் வண்டல் மண் / களிமண் / மண் ஆகிய கனிமங்களை இணைய வழியில் விண்ணப்பம் செய்து அந்தந்த வட்டாட்சியர்களின் அனுமதி பெற்று இலவசமாக எடுத்துச் செல்லும் வகையில் தமிழ்நாடு சிறுகனிம சலுகை விதிகள், 1959 விதி எண்.12(2)-இல் சில மாற்றங்கள் செய்து அரசு ஆணை எண். 14 இயற்கை வளங்கள் (எம்.எம்.சி.1) துறை, நாள். 12.06.2024 வெளியிடப்பட்டது.

அதன்படி, பெரம்பலூர் மாவட்டத்தில் அமைந்துள்ள வண்டல் மண் /களிமண் / மண் ஆகிய கனிமங்கள் எடுக்க வாய்ப்புள்ள ஏரி, குளங்கள் கண்டறியப்பட்டு மாவட்ட அரசிதழ் எண்.5, நாள்: 26.06.2024-இல் வெளியிடப்பட்டு இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. அதனடிப்படையில், பெரம்பலூர் மாவட்டத்தில் பொதுப்பணித்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள 66 ஏரிகளும், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள 176 ஏரி குளங்கள் என மொத்தம் 242 நீர்நிலைகள் கண்டறியப்பட்டுள்ளது. எனவே, விவசாய நிலத்தை மேம்படுத்த, மண்பாண்டம் செய்ய மற்றும் பொது பயன்பாட்டிற்கு வண்டல் மண் / களிமண் / மண் எடுக்க விரும்பும் விவசாயிகள் / மண்பாண்டம் செய்வோர் மற்றும் பொதுமக்கள் அருகில் உள்ள இ-சேவை மையத்தில் https:/www.tnesevai.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பம் செய்து அரசிதழில் வெளியிடப்பட்டுள்ள தங்கள் வட்டத்திற்குட்பட்ட ஏரி, குளங்களிலிருந்து இலவசமாக எடுத்துச் செல்ல அனுமதி பெற்றுக் கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story