மக்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில் போராட்டம் - SRMU பொதுச்செயலாளர் கண்ணையா

மக்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில் போராட்டம் - SRMU பொதுச்செயலாளர் கண்ணையா
கண்ணைய்யா செய்தியாளர் சந்திப்பு
மத்திய அரசின் புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்யகோரி கோவை ரயில் நிலையம் முன்பு ரயில்வே ஊழியர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

புதிய பென்ஷன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து ரயில்வே ஊழியர்கள் கடந்த எட்டாம் தேதி முதல் காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.மத்திய அரசின் புதிய பென்ஷன் திட்டத்திற்கு பல்வேறு மத்திய அரசு துறை ஊழியர்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து அதனை ரத்து செய்ய வேண்டியும் பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டி தொடர்ந்து பல்வேறு இடங்களில் பல கட்ட போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர்.

இதன் தொடர்ச்சியாக கோவை ரயில் நிலையம் முன்பு ரயில்வே ஊழியர்கள் (SRMU)தொடர்ந்துள்ள உண்ணாவிரத போராட்டத்தில் 300க்கு மேற்பட்டவர்கள் பங்குபெற்றுள்ளனர்.SRMU மண்டல தலைவர் ராஜா ஸ்ரீதர்,சேலம் கோட்ட செயலாளர் கோவிந்தன் உட்பட 300க்கும் மேற்பட்ட ரயில்வே ஊழியர்கள் இந்த உண்ணாவிரத போராட்டத்தில் கலந்து கொண்டனர்.இந்த போராட்டத்தில் SRMUவின் பொது செயலாளர் கண்ணையா கலந்துகொண்டார்.

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த கண்ணையா, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தகோரி வலியுறுத்தி வந்த நிலையில் மத்திய அரசு பதில் அளிக்காத காரணமாக முதற்கட்டமாக நான்கு நாட்களாக உண்ணாவிரதம் போராட்டம் நடத்தி வருவதாக தெரிவித்தார்.இரயில்வே துறை சேர்ந்தவர்கள் மட்டுமின்றி அதை சார்ந்த மக்களும் பாதிப்பு அடைந்துள்ளனர் எனவும் மக்களுடன் சேர்த்து போராட்டம் நடத்தி வருகிறோம் என்றார். அடித்தட்டு,நடுத்தர மக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வண்ணம் கோரிக்கை வலியுறுத்தி போராட்டம் நடத்தி வருவதாகவும் வந்தே பாரத் திட்டம் போன்றவையால் எளிய மக்கள் பதிப்படைய வாய்ப்புள்ளது எனவும் எல்லா பெட்டிகளும் ஏ.சி பெட்டிகளாக மாற்றும் போது கட்டணம் உயர்வால் பாதிப்படையாவர்கள் என தெரிவித்தார்.

மத்திய அரசு ஒவ்வொரு துறையாக தனியாருக்கு கொடுத்து வரும் நிலையில் இப்போது இரயில்வே துறைக்கு வந்துவிட்டதாகவும் தனியாரிடம் இரயில்வே சென்றால் ஆம்னி பஸ் போன்று இரயில்வேயில் பயண கட்டணம் உயரும் என்றவர் 100 இரயில்கள் தனியாருக்கு கொடுக்கபட்டுள்ளதாக கூறினார்.மூன்றாவது நாளக போராட்டம் தொடரும் நிலையில் அரசு எந்த விதமான பேச்சுவார்த்தைக்கும் இதுவரை அழைத்து பேசவில்லை என்றார்.

Tags

Next Story