பணியின் போது தவறி விழுந்த கட்டிட தொழிலாளர் உயிரிழப்பு

பணியின் போது தவறி விழுந்த கட்டிட தொழிலாளர் உயிரிழப்பு

காவல் நிலையம் 

மயிலாடுதுறை அருகே பெரம்பூர் பகுதியில் சிமெண்ட் மூட்டை தூக்கி சென்ற போது தடுமாறி விழுந்து படுகாயம் அடைந்த கட்டிட தொழிலாளி , அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

மயிலாடுதுறை அருகே பெரம்பூர் கடக்கும் மேல தெருவை சேர்ந்தவர் கஜேந்திரன் இவர் மாங்குடி பகுதியில் உள்ள மணிகண்டன் என்பவர் வீட்டில் கொத்தனாருக்கு சித்தாளாக வேலை பார்த்து வந்தார். கடந்த ஏழாம் தேதி அன்று காலையில் சிமெண்ட் மூட்டையை தூக்கி கொண்டு வீட்டுக்குள் நடந்த பொழுது கால் தடுமாறி கீழே விழுந்ததில் தலை கழுத்து மற்றும் இடுப்பு ஆகிய இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டது, உடனடியாக அவரை மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்ததால் மேல் சிகிச்சைக்காக அவரை தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்திருந்தனர். கடந்த ஐந்து தினங்களாக சிகிச்சை பெற்று வந்த நபர் சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார். இது குறித்து அவர் மனைவி கல்யாணி அளித்த புகாரின் பேரில் பெரம்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story