இடி,மின்னல் தாக்கி தந்தை மகன் படுகாயம் - 2 பசு மாடுகள் உயிரிழப்பு!

இடி,மின்னல் தாக்கி தந்தை மகன் படுகாயம் -  2 பசு மாடுகள் உயிரிழப்பு!

பைல் படம் 

வாணியம்பாடி அருகே இடி மின்னல் தாக்கியதில் தந்தை மகன் படுகாயம் அடைந்தனர். அவர்களுக்கு சொந்தமான 2 பசு மாடுகள் உயிரிழந்தன.
திருப்பத்தூர் மாவட்டத்த்தில் கடந்த சில தினங்களாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் நேற்று இரவு இடி மின்னலுடன் பெய்த கனமழையால்திருப்பத்தூர் அடுத்த வாணியம்பாடி பெரிய வெள்ளை குட்டை பகுதியை சேர்ந்த தனியார் கல்லூரியில் பணி புரிந்து வரும் சரவணன் மற்றும் அவரது மகன் ரஞ்சித் இடி மின்னல் தாக்கி படுகாயம் அடைந்தனர் மற்றும் அவர்களுக்கு சொந்தமான இரண்டு பசுமாடுகள் சம்பவ இடத்தில் உயிரிழந்தது. படுகாயம் அடைந்த சரவணன் அவரது மகன் ரஞ்சித் இருவரையும் வேலூர் அடுக்கம்பாரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Tags

Next Story