மகள் காதல் திருமணம் செய்ததால் தற்கொலை செய்த தந்தை

மகள் காதல் திருமணம் செய்ததால்  தற்கொலை செய்த தந்தை

தற்கொலை 

ஆரல்வாய்மொழி அருகே மகள் காதல் திருமணம் செய்ததால் தந்தை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி அருகே வடக்கூர் பகுதியை சேர்ந்தவர் சுந்தர் (50). இவர் சவுதி அரேபியாவில் உள்ள நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். அவரது மனைவி ரூபா. இந்த தம்பதிக்கு ஆஷிகா முத்து செல்வி (19) என்ற மகள் உள்ளார். ஆரல்வாய் மொழியில் உள்ள ஒரு கல்லூரியில் படித்து வந்த ஆஷிகா முத்து செல்வி வாலிபர் வருவரை தீவிரமாக காதலித்து வந்துள்ளார்.

இந்த விவகாரம் பெற்றோருக்கு தெரிய வந்துள்ளது. ஆனாலும் பெற்றோர் எதிர்ப்பை மீறி ஆஷிகா முத்துசெல்வி சமீபத்தில் அந்த வாலிபரை திருமணம் செய்து கொண்டதாக தெரிகிறது. இந்த விவரம் அறிந்ததும் சுந்தர் அதிர்ச்சி அடைந்தார். அவர் கடந்த 15 நாட்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு வந்து விட்டார். தனது ஒரே மகள் இப்படி தங்களின் விருப்பம் இல்லாமல் காதல் திருமணம் செய்ததால் மனவேதனை அடைந்தார். இந்த நிலையில் மகளையும் மருமகனையும் வேறு வழி இன்றி ஏற்றுக்கொண்டார். ஆனால் சுந்தர் மன வேதனையில் இருந்து வந்துள்ளார்.

இதற்கிடையில் நேற்று இரவு சுந்தர் வீட்டின் கழிவறைக்கு சென்று நீண்ட நேரமாகியும் அவர் வெளியே வரவில்லை. சந்தேகம் அடைந்த மனைவி ரூபா கழிவறையில் உறவினர்கள் உதவியுடன் சென்று பார்த்த போது, சுந்தர் கத்தியால் கழுத்தை அறுத்து ரத்த வெள்ளத்தில் சுயநினைவு இழந்து காணப்பட்டுள்ளார்.

உடனே 108 ஆம்புலன்ஸ் மூலம் சுந்தரை மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

சுந்தரர் தற்கொலைக்கு காரணம் மகளின் காதல் திருமணமா? அல்லது வேறொரு ஏதாவது காரணமா என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

Tags

Next Story