குடும்பத் தகராறில் மருமகனை கொல்ல முயன்ற மாமனார் கைது.

கரூர் அருகே குடும்பத் தகராறில் மருமகனை கொல்ல முயன்ற மாமனார் கைது; மற்றொரு உறவினர் தலைமறைவானார்.

குடும்பத் தகராறில் மருமகனை தடியால் தாக்கி, மண்வெட்டியால் கொலை செய்ய முயன்ற வழக்கில் மாமனார் கைது. மற்றொரு உறவினர் தலைமறைவு.

கரூர் மாவட்டம், சிந்தாமணிபட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட டி.சீத்தப்பட்டி, காமராஜபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ரத்னாச்சலம் வயது 48. இவரது மகள் சுகன்யாவிற்கும், கரூர், வடக்கு வெள்ளியணை, செல்லாண்டிபட்டி பகுதியைச் சேர்ந்த மாரிமுத்து வயது 31 என்பவருக்கும் கடந்த ஐந்தரை ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்று இவர்களுக்கு 4- வயதில் சர்வேஷ் என்ற மகன் உள்ளான்.

இந்நிலையில், கணவன் மனைவி இடையே, கடந்த நவம்பர் மாதம் 27ம் தேதி ஏற்பட்ட குடும்ப சண்டை காரணமாக, சுகன்யா அவரது தந்தை வீட்டுக்கு சென்றுவிட்டார். மனைவியையும், குழந்தையையும் பார்ப்பதற்கு, மாமனார் வீட்டிற்கு சென்றார் மாரிமுத்து. ஆனால், ரத்னாச்சலம் தடுத்தார்.

இதனால் தனது வீட்டிற்கு திரும்பினார் மாரிமுத்து. பின்பு, மாமனார் ரத்னாச்சலம், உறவினர் வீரராக்கியம் பகுதியை சேர்ந்த சிவா ஆகியோர் சேர்ந்து, மாரிமுத்துவின் வீட்டிற்கு சென்று, தகாத வார்த்தை பேசி, தடியால் தாக்கி, மண்வெட்டியால் வெட்டி கொலை செய்ய முயன்றனர்.

இந்த சம்பவத்தில் தப்பிய மாரிமுத்து, சிந்தாமணிபட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்டு, ரத்னாச்சலத்தை நவம்பர் 30 தேதி கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Tags

Next Story