விபத்தில் இறந்தவரின் தந்தை புகார்: காவல்துறை வழக்கு பதிவு

விபத்தில் இறந்தவரின் தந்தை புகார்: காவல்துறை வழக்கு பதிவு

விபத்தில் சிக்கிய கார் 

அரவக்குறிச்சி அருகே விபத்தில் இறந்தவரின் தந்தை அளித்த புகாரில் காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளனர்.

தூத்துக்குடியைச் சேர்ந்தவர் ஹித்ருமைதீன் வயது 54. இவரது மகள் ஜாஸ்மின் வயது 23, மருமகன் லகூத் வயது 31.இவர்கள் மூவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். இவர்கள் பெங்களூரு சென்று விட்டு மீண்டும் சொந்த ஊர் தூத்துக்குடி செல்வதற்காக அவர்களுக்கு சொந்தமான மாருதி வேகன் காரில் சென்றுனர்.

இந்த காரை தூத்துக்குடியைச் சேர்ந்த அப்துல் ஜாபர் மகன் ஜாபர் சாதிக் வயது 22 என்பவர் ஓட்டிச் சென்றார். இந்த கார் நேற்று காலை சுமார் 6-மணி அளவில்,கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி, சீதப்பட்டி காலனி அருகே வேகமாக வந்தபோது, வாகனம் கட்டுப்பாட்டை இழந்து, சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் காரில் பயணித்த அனைவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது.

அவர்களை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். செல்லும் வழியில் கார் ஓட்டுனர் ஜாபர் சாதிக் உயிரிழந்தார். மேலும், ஹித்ருமைதீன், ஜாஸ்மின், லகூத் ஆகிய மூன்று பேரையும் கரூரில் உள்ள நாச்சிமுத்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். உயிரிழந்த ஜாபர் சாதிக்கின் உடலை உடற்கூறு ஆய்வுக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் அறிந்த ஜாபர் சாதிக்கின் தந்தை அப்துல் ஜாபர் அளித்த புகாரின் பேரில், அரவக்குறிச்சி காவல்துறையினர், வழக்கு பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story