தந்தை பெரியார் நினைவு தினம்: ஆதித்தமிழர் பேரவையினர் மரியாதை

தந்தை பெரியார் நினைவு தினம்: ஆதித்தமிழர் பேரவையினர் மரியாதை

பெரியார் சிலைக்கு மரியாதை செய்த ஆதித்தமிழர் பேரவையினர்

தந்தை பெரியாரின் 50 ம் ஆண்டு நினைவு தினத்தை ஒட்டி பெரியார் சிலைக்கு ஆதித்தமிழர் பேரவையினர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

சமூக சீர்திருத்தவாதியும் திராவிடர் கழக நிறுவனமான தந்தை பெரியாரின் 50 ஆவது ஆண்டு நினைவு தினம் திருச்செங்கோட்டில் கடைபிடிக்கப் பட்டது. புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள பெரியாரின் சிலைக்கு பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

ஆதித்தமிழர் பேரவை சார்பில் மாவட்ட செயலாளர் சரவணன குமார் தலைமையில் பேரவையின் நிறுவனர் அதியமான் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்டவர்கள் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

நிகழ்ச்சியில் மாவட்ட துணை செயலாளர் சிவசங்கர், மாநில பொதுச் செயலாளர் ரவிக்குமார்,துணை பொதுச்செயலாளர் செல்வ வில்லாளன், தமிழரசு, மணிமாறன், திருச்செங்கோடு நகர செயலாளர் சரவணன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர் இதேபோல் பெரியார் திராவிடர் கழகம் திராவிட விடுதலைக் கழகம் உள்ளிட்ட அமைப்புகளை சேர்ந்தவர்கள் பெரியாரின் உருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

Tags

Next Story