ஆலங்குளம் அருகே தந்தை, மகன் கைது

ஆலங்குளம் அருகே தந்தை, மகன் கைது

பைல் படம் 

ஆலங்குளம் அருகே சொத்து தகராறு காரணமாக, தம்பதியை வெட்டி, கொல்ல முயற்சித்த தந்தை, மகனை போலீசார் கைது செய்தனர்.
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகேயுள்ள பூலாங்குளம் கீழத்தெருவைச் சோ்ந்த பலவேசமுத்து மகன்கள் லிங்கதுரை(59), சீத்தாராமன்(52). சகோதரா்களான இருவருக்குமிடையே சொத்து தொடா்பாக தகறாறு இருந்து வந்ததாம். இந்நிலையில் சீத்தாராமன், அவரது மனைவி முத்துச்செல்வி(45) ஆகியோா் தோட்டத்தில் நின்றிருந்த போது அங்கு மது போதையில் வந்த லிங்கதுரை, அவரது மகன் பால்சன்(32) ஆகியோா் தம்பதியிடம் தகராறில் ஈடுபட்டனா். இதில் வாக்குவாதம் முற்றிய நிலையில், மண்வெட்டியால் சீத்தாராமன் மற்றும் முத்துச்செல்வியை லிங்கதுரையும் பால்சனும் தலைப் பகுதியில் வெட்டிவிட்டு தப்பியோடி விட்டனா். இதில் தம்பதி படுகாயமடைந்தனா். அவா்களை ஆலங்குளம் போலீஸாா் மீட்டு, திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். தப்பியோடிய தந்தை, மகனை கைது செய்து ஆலங்குளம் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தினா்.

Tags

Next Story