மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தந்தை

மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தந்தை

கன்னியாகுமரி மாவட்டம் மண்டைக்காடு அருகே மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த கொடூர தந்தை மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.


கன்னியாகுமரி மாவட்டம் மண்டைக்காடு அருகே மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த கொடூர தந்தை மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் மண்டைக்காடு அருகே உள்ள ஒரு மீனவ கிராமத்தை சேர்ந்தவர் பிரான்சிஸ் ( 42). கடலில் மீன் பிடித்து செய்து வருகிறார். இவருக்கு மனைவி, ஒரு மகனும், 15 வயதில் ஒரு மகள் உள்ளனனர். மகள் குளச்சலில் ஒரு தனியார் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு தற்போது தேர்ச்சி பெற்றுள்ளார். கடந்த 2-ம் தேதி சிறுமியின் தாயார் தனது சகோதரி வீட்டுக்கு சென்றார். சிறுமியின் அண்ணன் நண்பர்களுடன் வெளியே சென்றுள்ளார். அப்போது வீட்டில் தனியாக இருந்த சிறுமிக்கு தந்தை பாலியல் தொல்லை கொடுத்தார். இதுபோல் இன்னொரு நாள் பாலியல் தொல்லை கொடுத்த போது வெளியே சென்றிருந்த சிறுமியின் தாயார் திடீரென வீட்டிற்கு வந்தார். அவர் கணவரின் செயலை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து பாதிக்கப்பட்ட சிறுமி குளச்சல் மகளிர் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) பத்மாவதி சிறுமியின் தந்தை மீது போக்சோ உட்பட 8 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். இதற்கிடையை தந்தை தலைமறைவாகிவிட்டார். அவரை தனிப்பிரிவு போலீசார் தேடி வருகின்றனர்.

Tags

Next Story