தடுப்புச்சுவர் இல்லாத சிறுபாலத்தால் அச்சம்

தடுப்புச்சுவர் இல்லாத சிறுபாலத்தால் அச்சம்

தடுப்பு சுவர் இல்லாததால் அச்சம்

காஞ்சிபுரம் ஒன்றியம், திருப்பருத்திக்குன்றம் பிரதான சாலையில், சாலையின் குறுக்கே மழைநீர் செல்லும் சிறுபாலம் உள்ளது. இந்த பாலத்திற்கு தடுப்புச்சுவர் இல்லாமல் உள்ளது. இதனால், இருசக்கர வாகன ஓட்டிகள், கனரக வாகனங்களுக்கு வழிவிட சாலையோரம் ஒதுங்கும்போது, தடுப்புச்சுவர் இல்லாத பகுதியில் நிலை தடுமாறி, கால்வாய் பள்ளத்தில் தவறி விழுந்து விபத்தில் சிக்கும் சூழல் உள்ளது. எனவே, விபத்தை தவிர்க்கும் வகையில், சிறுபாலத்திற்கு தடுப்புச்சுவர் அமைக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Tags

Next Story