"எலும்புக்கூடாக உருமாறிய மின்கம்பத்தால் விபத்து அச்சம்"

எலும்புக்கூடாக உருமாறிய மின்கம்பத்தால் விபத்து  அச்சம்
ஆபத்தான நிலையில் மின்கம்பம் 
சின்ன காஞ்சிபுரம் மிலிட்டரி சாலை அருகே ஆபத்தான நிலையில் உள்ள மின்கம்பத்தை அகற்றிவிட்டு, புதிய கம்பம் அமைக்க மின்வாரியத்தினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதியினர் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
சின்ன காஞ்சிபுரம், பெரியார் நகரில் இருந்து, ஓரிக்கை- செவிலிமேடு வரை மிலிட்டரி சாலை உள்ளது. கனரக வாகனங்கள் அதிகளவு செல்லும் இச்சாலை அகலம் குறைவாக உள்ளதால், தற்போது விரிவாக்கம் செய்யும் பணி நடந்து வருகிறது. இந்நிலையில், மிலிட்டரி சாலை, தேனம்பாக்கம் ஒட்டியுள்ள பெரிய தம்பிரான் ஈஸ்வரன் கோவில் அருகில் உள்ள மின்கம்பத்தின் மையப் பகுதியில் உடைப்பு ஏற்பட்டு ஆபத்தான நிலையில் உள்ளது. எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலையில் உள்ள மின்கம்பத்தால், அவ்வழியாக செல்லும் பாதசாரிகளும், வாகன ஓட்டிகளும் அச்சத்துடன் சென்று வருகின்றனர். மேலும், இச்சாலையில் செல்லும் கனரக வாகனம் மின்கம்பத்தில் லேசாக உரசினாலே விழுந்து, பெரிய அளவில் மின் விபத்து ஏற்படும் சூழல் உள்ளது. எனவே, மின் விபத்தை தவிர்க்கும் வகையில், ஆபத்தான நிலையில் உள்ள மின்கம்பத்தை உடனே அகற்றிவிட்டு, புதிய கம்பம் அமைக்க மின்வாரியத்தினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்என, அப்பகுதியினர்கோரிக்கை விடுத்து உள்ளனர்."

Tags

Next Story