வண்ணாரப்பேட்டையில் பிப்.27 மக்கள் நேர்காணல் முகாம்

வண்ணாரப்பேட்டையில் பிப்.27 மக்கள் நேர்காணல் முகாம்
ஆட்சியர் தீபக் ஜேக்கப்
தஞ்சையில் மக்கள் நேர்காணல் முகாம் தொடர்பாக ஆட்சியர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

பொதுமக்களின் குறைகளை உடனுக்குடன் நிவர்த்தி செய்யும் பொருட்டு 1969 ஆம் ஆண்டு முதல் தமிழ்நாட்டில் ”மக்கள் நேர்காணல் முகாம்” என்ற திட்டம் தொடங்கப்பட்டு ஒவ்வொரு மாதமும் 2-வது புதன்கிழமை நடைபெற்று வருகிறது. அதனைத்தொடர்ந்து,

எதிர்வரும் 27.02.2024 (செவ்வாய்க்கிழமை) அன்று தஞ்சாவூர் வட்டம், பெரம்பூர் சரகம், வண்ணாரப்பேட்டை முதன்மை கிராமத்தில் ”மக்கள் நேர்காணல் முகாம்” நடத்திட தஞ்சாவூர், மாவட்ட ஆட்சித்தலைவரால் ஆணையிடப்பட்டுள்ளது.

மேற்படி ”மக்கள் நேர்காணல் முகாம்” பொதுமக்கள் பெருமளவில் கலந்து கொண்டு தங்களது கோரிக்கை தொடர்பாக மனுக்களை அளித்து தீர்வு பெற்றுக்கொள்ளுமாறு தகவல் தெரிவிக்கப்படுகிறது.

மேலும், 19.02.2024 (திங்கட்கிழமை) முதல் மக்கள் நேர்காணல் முகாம் நடைபெறுவதற்கு முன்னரே முன்மனுக்கள் பெறுவதற்கு நடவடிக்கை எடுக்கும் பொருட்டு பொதுமக்கள் தங்களது கோரிக்கை மனுக்களை வண்ணாரப்பேட்டை முதன்மை கிராம நிர்வாக அலுவலகத்தில் அளித்து பயனடையுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் தீபக் ஜேக்கப், தெரிவித்துள்ளார்.

Tags

Next Story