வணிகர் சங்கங்களின் பேரமைப்பு பொதுக்குழு

வணிகர் சங்கங்களின் பேரமைப்பு பொதுக்குழு

வணிகர் சங்கங்களின் பேரமைப்பு பொதுக்குழு

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருவெண்ணெய்நல்லுாரில் வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் நடைபெற்ற மூன்றாமாண்டு துவக்க விழா பொதுக்குழுவில் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

திருவெண்ணெய்நல்லுாரில் வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் மூன்றாம் ஆண்டு துவக்க விழா மற்றும் பொதுக்குழு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு, கிளைத் தலைவர் மணிவண்ணன் தலைமை தாங்கினார். கவுரவத் தலைவர் புருஷோத்தமன், துணைத் தலைவர் ஜாகிர் உசேன், துணைச் செயலாளர்கள் பிரபு, முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

செயலாளர் பாண்டுரங்கன் வரவேற்றார். மாவட்ட தலைவர் ராமகிருஷ்ணன், மாநில இணைச் செயலாளர் யாசின் மவுலானா, விழுப்புரம் சேம்பர் ஆப் காமர்ஸ் பி.ஆர்.ஒ., அகிலன், இன்ஸ்பெக்டர் செல்வராஜ், தீயணைப்பு அலுவலர் ராஜவேலு உட்பட பலர் பங்கேற்றனர்.

Tags

Next Story