பெலிக்ஸ் ஜெரால்டை போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி

பெலிக்ஸ் ஜெரால்டை போலீஸ் காவலில் விசாரிக்க  அனுமதி

பெலிக்ஸ் ஜெரால்டு

பெலிக்ஸ் ஜெரால்டை போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கோவை மாநகர சைபர் கிரைம் போலீசார் பதிவு செய்த வழக்கில் தனியார் youtube சேனல் எடிட்டர் பெலிக்ஸ் ஜெரால்டை ஐந்து நாட்கள் காவலில் விசாரிக்க வேண்டுமென கோவை நான்காவது குற்றவியல் நீதிமன்றத்தில் மனு அளித்திருந்தனர்.

காவல் உயர் அதிகாரிகள் மற்றும் பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் சவுக்கு சங்கர் மீது பதியப்பட்ட வழக்கில் இரண்டாவது நபராக பெலிக்ஸ் ஜெரால்ட் சேர்க்கப்பட்டார்.இந்நிலையில் இன்று திருச்சியில் இருந்து அழைத்துவரப்பட்ட பெலிக்ஸ் ஜெரால்ட் கோவை நான்காவது குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டார்.நீதிபதி சரவணபாபு முன்னிலையில் விசாரணைக்கு மனு ஏற்கப்பட்ட நிலையில் பெலிக்ஸ் ஜெரால்டை போலீசார் ஒரு நாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளித்து நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

மேலும் நாளை 4 மணிக்கு மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர் செய்ய வேண்டும் எனவும் 6 மணி நேரத்துக்கு ஒருமுறை வழக்கறிஞர்களை சந்திக்க அனுமதி அளிக்க வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.சைபர் கிரைம் போலீசார் பதிவு செய்த வழக்கில் ஏற்கனவே சவுக்கு சங்கரை ஒரு நாள் காவலில் வைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டதை அடுத்து தற்போது youtube சேனலில் நேர்காணல் எடுத்த எடிட்டர் பெலிக்ஸ் ஜெரால்டு ஒருநாள் காலையில் எடுத்து போலீசார் விசாரிக்க திட்டமிட்டுள்ளனர்.

Tags

Next Story