விபத்தில் உயிரிழந்த காவலருக்கு நிவாரணம் வழங்கிய சக காவலர்கள்

விருதுநகரில் சாலை விபத்தில் உயிரிழந்த முதல் நிலைக் காவலர் கார்த்திகேயன் குடும்பத்தினரிடம் ரூ.25,16 லட்சத்துக்கான காசோலையை சக போலீசார் ஒப்படைத்தனர்.

விருதுநகர் மாவட்டம் வச்சகாரப்பட்டி காவல் நிலையத்தில் முதல் நிலை காவலராக கார்த்திகேயன் என்பவர் கடந்த 2021 ஆம் ஆண்டு முதல் பணிபுரிந்து வந்துள்ளார். இந்த நிலையில் பணி நிமித்தம் காராணமாக கடந்த 2023 ஆண்டு அக்டோபர் மாதம் 16ஆம் தேதி இரவு சூலக்கரை காவல் நிலையத்திலிருந்து ஆமத்தூர் காவல்நிலையத்திற்கு முதல் நிலைக் காவலரான கார்த்திகேயன் என்பவர் மதுரை - சாத்தூர் தேசிய நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது நின்று கொண்டிருந்த லாரியில் மோதி வந்த சம்பவ இடத்திலே உயிரிழந்தார்.

இவருக்கு உதவிக்கரம் நீட்டும் விதமாக அவருடன் 2009 ஆம் ஆண்டு வருடம் முதல் தமிழக முழுவதும் பணியில் சேர்ந்த சுமார் 4724 காவலர்கள் ஒன்று சேர்ந்து இவருடைய 4 வயது மகன் ஹரிஸ்ராஜ் பெயரில் ரூபாய் ( 12 லட்சம் 47 ஆயிரத்து 355 க்கான காப்பீடு தொகையும்) 10 வயது மகள் கிருபாலினி பெயரில் 12 லட்சத்து 53 ஆயிரத்து 357 க்கான காப்பீடு தொகையும்) மேலும் அவருடைய மனைவி பெயரில் மீதமுள்ள 15 ஆயிரத்து 674 மற்றும் காப்பீட்டுத் தொகைக்கான கமிஷன் தொகை ரூ 25000, மேலும் புதிதாக பணியில் சேர்ந்த காவலர்கள் சேர்ந்து 16,500 என மொத்தம்25 லட்சத்து 16 ஆயிரத்து 389 ரூபாய் காண காசோலையை அவருடைய குடும்பத்தினரிடம் சக காவலர்கள் வழங்கினர்கள் .

அதற்கு முன்பாக சாலை விபத்தில் மரணமடைந்த கார்த்திகேயன் அவர்களின் திரு உருவ படத்திற்கு சக காவலர்கள் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்

Tags

Next Story