பட்டதாரி பெண் தூக்குப்போட்டு தற்கொலை

பட்டதாரி பெண் தூக்குப்போட்டு தற்கொலை

பெண் தற்கொலை

நாகர்கோவிலில் பட்டதாரி பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
நாகர்கோவில் கோட்டார் பகுதியை சேர்ந்தவர் மதுசூதனன். சென்னையை சேர்ந்தவர் சுபாஷினி (வயது23). பி.காம் பட்டதாரி. இவர்கள் இருவரும் வங்கி ஒன்றில் வேலை பார்த்த போது, இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்கு பிறகு சுபாஷினி நாகர்கோவில் கோட்டார் பகுதியில் உள்ள வீட்டில் கணவருடன் வசித்து வந்தார். கணவன்- மனைவிக்கிடையே குடும்ப பிரச்சனை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. நேற்றும் அவர்களுக்கு இடையே பிரச்சனை ஏற்பட்டது. இதனால் மனவேதனையடைந்த சுபாஷினி வீட்டில் ஒரு அறைக்கு சென்று கதவை பூட்டிக்கொண்டார். நீண்ட நேரமாகியும் கதவு திறக்கப்படவில்லை. இதனால் சந்தேகமடைந்து கதவை உடைத்து பார்த்த போது, சுபாஷினி தூக்கில் பிணமாக தூங்கினார். இது குறித்து கோட்டார் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தூக்கில் பிணமாக தொங்கிய சுபாஷினியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். திருமணமாகி 2 ஆண்டுகளே ஆவதால் ஆர்.டி.ஓ. விசாரணை மேற்கொண்டு வருகிறார். இதுகுறித்து கோட்டார் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

Tags

Next Story