பெண் சிறுத்தை பலி

பெண் சிறுத்தை பலி

உதகை அருகே சுருக்கு கம்பியில் சிக்கி மீட்கப்பட்ட 5 வயது பெண் சிறுத்தை பரிதாபமாக உயிரிழந்தது.

உதகை அருகே சுருக்கு கம்பியில் சிக்கி மீட்கப்பட்ட 5 வயது பெண் சிறுத்தை பரிதாபமாக உயிரிழந்தது.
நீலகிரி மாவட்டம் உதகை அருகே தீட்டுக்கள் பகுதியில் நேற்று மாலை தனியாருக்கு சொந்தமான இடத்தை சுற்றி அமைக்கப்பட்டுள்ள கம்பி வேலியில் சிறுத்தை சிக்கியிருப்பதாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த வனத்துறையினர் 6 மணி நேரம் போராடி வேலிக்கம்பியில் பின்னங்கால்கள்சிக்கியிருந்த சிறுத்தையை மயக்க ஊசி செலுத்தி மீட்டனர். மீட்கப்பட்ட சிறுத்தை பார்சன்ஸ்வேலி வனப்பகுதிக்ல் விடுவிக்க கொண்டு செல்லப்பட்டது. வனப்பகுதியில் சிறுத்தையை விடுவிக்கும் போது அதனால் எழுந்து நடக்க முடியாமல் தவித்து சிறிது நேரத்தில் சிறுத்தை பரிதாபமாக உயிரிழந்துள்ளது. சிறுத்தை சிக்கி இருந்தது வேலி கம்பிகள் அல்லll வனவிலங்குகள் வேட்டையாட போடப்பட்ட சுருக்கு கம்பி என வனத்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது. இறந்த சிறுத்தையின் உடல் உடற்கூராய்வு செய்யப்படடது. இச்சம்பவம் தொடர்பாக சம்பவ இடத்தில் வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு உள்ளனர்.

Tags

Next Story