குடும்ப தகராற்றில் பெண் தற்கொலை

குடும்ப தகராற்றில் பெண் தற்கொலை

பெண் தற்கொலை

தேனி மாவட்டம், கம்பம் அருகே குடும்ப தகராற்றில் பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தேனி மாவட்டம் , கம்பம் சுருளிப்பட்டி சேர்ந்த பாரதி என்பவர் மகளிர் குழுவின் தலைவியாக இருந்து வந்துள்ளார் இந்த நிலையில் குழுவில் இருந்த சிலர் கட்டாத தவணைத் தொகையை பாரதியின் கணவர் ஈஸ்வரன் என்பவர் மனைவியின் நலன் கருதி கட்டி உள்ளார். இதனால், நேற்று கணவன் மனைவி இடையே சண்டை ஏற்பட்ட நிலையில் பாரதி தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் தகவல் அறிந்த ராயப்பன்பட்டி காவல்துறையினர் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.

Tags

Next Story