பெண் வன்கொடுமை

பெண் வன்கொடுமை

கன்னியாகுமரியில் வீட்டு வேலைக்கு வந்த பெண் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தை அடுத்து வழக்குப்பதிவு செய்யப்பட்டது.


கன்னியாகுமரியில் வீட்டு வேலைக்கு வந்த பெண் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தை அடுத்து வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
கன்னியாகுமரி அருகே உள்ள இலங்காமணிபுரத்தை சேர்ந்தவர் அமல்ராஜ் என்ற கருப்பசாமி (43). இவர் பழக்கடை, மளிகை கடை ஸ்டோர் வைத்துள்ளார். இவரது கடையில் 37 வயது பெண் ஒருவர் வேலை பார்த்து வந்துள்ளார். மேலும் அவர் அமல்ராஜ் வீட்டுக்கு வீட்டு வேலை செய்யவும் செல்வார் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த ஆண்டு வழக்கம் போல் அந்த பெண் அமல்ராஜ் வீட்டுக்கு வேலைக்காக சென்றிருந்தார். அப்போது வீட்டில் தனியாக இருந்த அமல்ராஜ் அந்தப் பெண்ணை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. இது பற்றி வெளியே கூறினால் கொலை செய்து விடுவேன் என்று மிரட்டியுள்ளார். இதனால் பெண் அது குறித்து யாரிடமும் கூறவில்லை. இந்த நிலையில் அவர் தொடர்ந்து மிரட்டல் விடுத்து வந்துள்ளார். இதனால் பாதிக்கப்பட்ட பெண் கன்னியாகுமரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட பல்வேறு பதிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து அமல்ராஜை கைது செய்தனர்.

Tags

Next Story