சுசீந்திரம் அருகே தூக்கு போட்டு பெண்தற்கொலை 

சுசீந்திரம் அருகே தூக்கு போட்டு பெண்தற்கொலை 

தூக்கு போட்டு பெண்தற்கொலை 

சுசீந்திரம் அருகே வரதட்சனை தொல்லையால் தூக்கு போட்ட பெண் விபரீத முடிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் அருகே உள்ள புத்தளம் பகுதியை சேர்ந்தவர் பரமசிவம். இவர் அதே பகுதியை சேர்ந்த பாக்கியவதி என்பவரை கடந்த 2020ல் திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில் தம்பதிகளுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. பரமசிங் மனைவி பாக்கியவதிடம் அடிக்கடி வரதட்சனை கேட்டு தொல்லை கொடுத்து வந்ததாக தெரிகிறது. இதனால் மனவேதனையில் இருந்த பாக்கியவதி நேற்று தனது வீட்டு மாடியில் உள்ள அறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து பாக்கியவதின் சகோதரர் தங்க ரத்தினம் என்பவர் சுசீந்திரம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் பாக்கியவதின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனை மருத்துவ கல்லூரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story