மாமரத்துப்பட்டி ஸ்ரீமாரியம்மன் ஆலயத்தில் திருவிழா !

மாமரத்துப்பட்டி ஸ்ரீமாரியம்மன் ஆலயத்தில்  திருவிழா !
100 மேற்பட்ட பக்தர்கள் ஊர் மாரியம்மன் கிணற்றிலிருந்து அக்னிசட்டியை கைகளில் பக்தி பரவசத்தில் ஏந்தி திருக்கோவிலை சுற்றி வந்து தங்களது நேர்த்தி கடன் செலுத்தினார்.
நாமக்கல் மாவட்டம், மோகனூர் , குமரிபாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட மாமரத்துபட்டி , சின்ன தம்பிபாளையகிராமத்திற்கு உட்பட்ட மாமரத்துபட்டியில் உள்ள அருள்தரும் அம்பிகையாக விளங்கும் அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் ஆலய பங்குனி மாத திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான பக்தர்கள் அக்னிசட்டி எடுக்கும் நிகழ்வு மிக விமர்சையாக நடைபெற்றது. இதில் 100 மேற்பட்ட பக்தர்கள் ஊர் மாரியம்மன் கிணற்றிலிருந்து அக்னிசட்டியை கைகளில் பக்தி பரவசத்தில் ஏந்தி திருக்கோவிலை சுற்றி வந்து தங்களது நேர்த்தி கடன் செலுத்தினார். அப்போது மூலவர் ஸ்ரீ மாரியம்மனுக்கு மஹா தீபம் காண்பிக்கப்பட்டது இதில் இப்பகுதி பக்தர்கள் கலந்து கொண்டனர் விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் மிகச் சிறப்பாக செய்திருந்தனர்.

Tags

Next Story