பண்டிகைக் கால போனஸ்: சிஐடியு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

பண்டிகைக் கால போனஸ்: சிஐடியு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

ஆர்ப்பாட்டம்


தமிழ்நாடு அரசு போக்குவரத்து, மின்சாரம், குடிநீர், டாஸ்மாக், கூட்டுறவு உள்ளிட்ட மாநில பொதுத்துறை நிறுவன தொழிலாளர்களுக்கான போனஸ் தொடர்பாக, தொழிற்சங்க தலைவர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி, தீபாவளி பண்டிகை கால போனஸ் 20 விழுக்காடு அறிவிக்கக் கோரி, வியாழக்கிழமை காலை, தஞ்சாவூர் தலைமை தபால் நிலையம் முன்பு சிஐடியு சங்கங்களின், தஞ்சை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு, அரசு போக்குவரத்துக் கழக, கும்பகோணம் மண்டல தலைவர் டி.காரல் மார்க்ஸ் தலைமை வகித்தார். சிஐடியு மாநிலச் செயலாளர் சி.ஜெயபால் ஆர்ப்பாட்டத்தை நிறைவு செய்து வைத்துப் பேசினார்.

Tags

Next Story