கோடங்குடி கிராமத்தில் கள ஆய்வு

கோடங்குடி கிராமத்தில் கள ஆய்வு

 ஆதிதிராவிட பொதுமக்களுக்கு வீட்டுமனை வழங்குவது தொடர்பாக, கோடங்குடி கிராமத்தில் உள்ள அரசுக்கு சொந்தமான இடங்களை வட்டாட்சியர் நேரில் சென்று கள ஆய்வு செய்தார். 

ஆதிதிராவிட பொதுமக்களுக்கு வீட்டுமனை வழங்குவது தொடர்பாக, கோடங்குடி கிராமத்தில் உள்ள அரசுக்கு சொந்தமான இடங்களை வட்டாட்சியர் நேரில் சென்று கள ஆய்வு செய்தார்.
கடலூர் மாவட்டம் திட்டக்குடி வட்டம் கோடங்குடி கிராம ஆதிதிராவிட பொதுமக்களுக்கு வீட்டுமனை வழங்குவது தொடர்பாக கோடங்குடி கிராமத்தில் உள்ள அரசுக்கு சொந்தமான இடங்களை வட்டாட்சியர் நேரில் சென்று கள ஆய்வு மேற்கொண்டார். இந்நிகழ்வில் தமிழக விவசாயிகள் மக்கள் கட்சி தலைவர் தயா. பேரின்பம் மற்றும் கிராம முக்கியஸ்தர்கள் காசிநாதன், நல்லமுத்து, சுரேஷ்குமார், அருணாச்சலம் மற்றும் கிராம பொதுமக்கள் ஆகியோர் உடன் இருந்தனர்.

Tags

Next Story