சிவகங்கை மாவட்டம் முழுவதும் ஆட்சியர் தலைமையில் கள ஆய்வு

சிவகங்கை மாவட்டம் முழுவதும் ஆட்சியர் தலைமையில் கள ஆய்வு

கள ஆய்வில் ஆட்சியர்

சிவகங்கை மாவட்டம் முழுவதும் ஆட்சியர் தலைமையில் கள ஆய்வு செய்தார்.

சிவகங்கை மாவட்டம் முழுவதும் இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுரையின்படி, 01.01.2024-ஐ தகுதியேற்படுத்தும் நாளாகக் கொண்டு, சிறப்புசுருக்கத் திருத்தம் 2024- க்கான வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல் மற்றும் திருத்தம் செய்வதற்கான சிவகங்கை மாவட்டத்தில் நடைபெற்ற சிறப்பு முகாம்களின் வாயிலாக பெறப்பட்ட தேர்தல் படிவங்கள் மற்றும் இதர நாட்களில் இணையவழி மற்றும் நேரடியாக பெறப்பட்ட படிவங்கள் தொடர்பாக, இன்றைய தினம் வாக்காளர் பட்டியல் கண்காணிப்பு அலுவலர் / வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை ஆணையர் சுந்தரவள்ளி, மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில், மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித், தலைமையில் நேரடி களஆய்வு மேற்கொண்டார்.

அதில், திருப்பத்தூர் வட்டத்திற்குட்பட்ட பி.கருங்குளம், சிவகங்கை வட்டத்திற்குட்பட்ட ஒக்கூர், காளையார்கோவில் வட்டத்திற்குட்பட்ட நாட்டரசன்கோட்டை ஆகிய பகுதிகளில், நேரடி களஆய்வு மேற்கொண்டார். அதனைத்தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கணினி வாயிலாகவும் பெறப்பட்ட விண்ணப்பங்கள் குறித்து மேஜை ஆய்வும் மேற்கொண்டார்.

Tags

Next Story