தகராறில் ஈடுபட்ட இரு தரப்பினர் மீது வழக்குப்பதிவு !

தகராறில் ஈடுபட்ட இரு தரப்பினர் மீது வழக்குப்பதிவு !

தகராறில் ஈடுபட்ட இரு தரப்பினர் மீது வழக்குப்பதிவு

இட விவகாரம் தொடர்பாக தகராறு - இருதரப்பினர் மீது போலீசார் வழக்குப்பதிவு.
கோவை:கணபதி பகுதியை சேர்ந்த சம்பத்குமார் தனக்கு சொந்தமான இடத்தை அதே பகுதியில் வசிக்கும் மணிகண்டன் என்பவருக்கு 15000 ரூபாய் வாடகைக்கு கொடுத்துள்ளார்.இங்கு மணிகண்டன் ஆடு,மாடுகள் வளர்பதுடன் பால் வியாபரம் செய்து வந்த நிலையில் இடத்தை காலி செய்து தருமாறு சம்பத்குமார் கேட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்ட நிலையில் சம்பவத்தன்று சம்பத்குமார் அவரது மனைவி செல்வி ஆகியோர் குடும்பத்தினரை தரக்குறைவாக பேசியதுடன் தன்னை தாக்கியதில் காயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றதாக அளித்த புகாரின் பேரில் சரவணம்பட்டி காவல் நிலையில் வழக்குப்பதிவு செய்யபட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இதேபோல் இட உரிமையாளர் சம்பத்குமார் இடத்தை காலி செய்து தர கேட்ட தன்னையும் தன் மனைவி செல்வியை மணிகண்டன் அவரது மனைவி லட்சுமி,மகன்கள் மற்றும் உறவினர்கள் தாக்கியதாக கூறி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.இருவரது புகாரையும் பெற்ற போலீசார் இதுகுறித்து விசாரித்து வருகின்றனர்.

Tags

Next Story