இடைத்தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட விருப்பமனு தாக்கல்

இடைத்தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட விருப்பமனு தாக்கல்

விருப்பமனு வழங்கல் 

விளவங்கோடு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட தொழிலதிபர் அஜிகுமார் விருப்பமனு அளித்தார்.

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுரையின்படி கன்னியாகுமரி மக்களவை தொகுதி பொதுத்தேர்தல் மற்றும் விளவங் கோடு சட்டமன்ற இடைத்தேர்தல் வரும் ஏப்ரல் 19-ம் தேதி நடை பெறுகிறது. இந்நிலையில் தமிழ் நாடு காங்கிரஸ் கட்சி சத்திய மூர்த்தி பவனில் விளவங்கோடு இடைத்தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் நடை பெற்றது.

அதில் விளவங்கோடு தொகுதியில் போட்டியிடுவதற்க்காக தொழிலதிபரும், அஜி அகாடமி சேர்மனும் ராஜீவ் காந்தி பஞ்சாயத்து ராஜ் சங்கதன் கன்னியாகுமரி மாவட்ட தலைவருமான விளவங்கோடு தொகுதியை சேர்ந்த அஜிகுமார் போட்டியிட விருப்பம் தெரிவித்து தமிழ்நாடு காங்கிரஸ் பொதுச் செயலாளரும் தேர்தல் பொறுப்பாளருமாகிய வாசு விடம் வேட்பு மனு தாக்கல் செய்தார். இந்நிகழ்ச்சியில் கன்னியாகுமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் டாக்டர் பினுலால் சிங். வட்டாரத் தலைவர் ரவி சங்கர், விளவங்கோடு ஊராட்சி தலைவி லைலா ரவி சங்கர் மற்றும் காங் கிரஸ் கட்சியினர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வாழ்த்தினர்.

Tags

Next Story