மறைந்த திமுக உறுப்பினர்கள் குடும்பத்திற்கு நிதியுதவி - இராஜேஸ்குமார் எம்.பி வழங்கினார்.

திமுக உறுப்பினர்கள் 52 குடும்பத்திற்கு தலா ரூ.10 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.5 லட்சத்து 20 ஆயிரம் மற்றும் கல்வி உதவி தொகையாக 5 பேருக்கு ரூ. 3 லட்சம் நிதியுதவியை வழங்கினார்.
நாமக்கல் நகரில் உள்ள திமுக உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகிகள் குடும்பத்தில் மறைந்த கழக உறுப்பினர்கள் குடும்பத்திற்கு நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக சார்பில் நிதி உதவி மற்றும் திமுக உறுப்பினர்களின் குழந்தைக்கு உயர்கல்வி பயில கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நாமக்கல்- முல்லை நகரில் உள்ள கிழக்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட அவைத் தலைவர் சி.மணிமாறன் வரவேற்றார். நாமக்கல் சட்டமன்ற உறுப்பினர் ராமலிங்கம், நகர திமுக செயலாளர்கள் ராணா ஆனந்த், சிவகுமார், பூபதி, ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்நிகழ்ச்சியில் நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான கே. ஆர்.என். இராஜேஸ்குமார் கலந்துகொண்டு கல்வி உதவித்தொகை மற்றும் மறைந்த கழக உறுப்பினர்கள் 52 குடும்பத்திற்கு தலா ரூ.10 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.5 லட்சத்து 20 ஆயிரம் மற்றும் கல்வி உதவி தொகையாக 5 பேருக்கு ரூ. 3 லட்சம் நிதியுதவியை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் நாமக்கல் நகராட்சி மன்ற தலைவர் கலாநிதி, சார்பு அணி நிர்வாகிகள் சித்தார்த், இளம்பரிதி, கிருபாகரன், நாசர் பாஷா, கடலரசன் கார்த்தி, அருள், கௌதம், நகர் மன்ற கவுன்சிலர்கள் மற்றும் திமுக நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story