மஞ்சுவிரட்டில் உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு நிதியுதவி

மஞ்சுவிரட்டில் உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு நிதியுதவி

சிறாவயல் மஞ்சுவிரட்டில் உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு ரூ. 4 லட்சம் நிதியுதவியை அமைச்சர் பெரியகருப்பன் வழங்கினார். 

சிறாவயல் மஞ்சுவிரட்டில் உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு ரூ. 4 லட்சம் நிதியுதவியை அமைச்சர் பெரியகருப்பன் வழங்கினார்.
சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் அருகே, சிறாவயல் ஊராட்சியில் கடந்த 17ஆம் தேதி நடைபெற்ற மஞ்சுவிரட்டு போட்டியின் போது பாதுகாப்பு வளையத்துக்கு வெளியே எதிர்பாராத விதமாக நடந்த சம்பவத்தில் உயிரிழந்த மருதங்குடி கிராமத்தைச் சேர்ந்த முத்துராமன் மகன் மணிமுத்து குடும்பத்திற்கு தமிழக முதல்வர் அறிவிப்பின்படி 3 லட்சம் மதிப்பில் நிவாரண நிதிக்கான காசோலையினை அமைச்சர் பெரியகருப்பன் இன்று வழங்கி, தன் சொந்த நிதியிலிருந்தும் ரூபாய் 1 லட்சம் நிதியினை அவரின் குடும்பத்திற்கு வழங்கி ஆறுதல் கூறினார். உடன் மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் உட்பட அரசு அலுவலர்கள் பலர் பங்கேற்றனர்

Tags

Next Story